மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-01-12 10:13 GMT
கைது 
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம், வீரகனூர் அருகே நடுவலூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இவரது பெற்றோர் இறந்து விட்டதால், தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் சிவா (33) என்பவர், வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதை கண்ட அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை பிடிக்க விரட்டினர். இதை கண்டு பயந்து போன சிவா, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது, கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிகிச்சை பெற்ற வந்த சிவாவை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை முடிந்ததையடுத்து, நேற்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News