தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-19 07:55 GMT

இளைஞர் கைது

ஆலங்குடி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அப்பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட அப்போது அங்கு கல்லாலங்குடி கலைஞர் நகரை சேர்ந்த தேசிகன் என்பவர் அவர் வீட்டில் லாட்டரி சீட்டு களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News