தீராத வயிற்று வலி – தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-04 11:24 GMT
தற்கொலை முயற்சி
திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் பிரேம்குமார் வயது 25 இவர் தீராத வயிற்று வலியால் சில தினங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று வயிற்று வலி அதிகமாக காலை 11 மணியளவில் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி உள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.