கடனை திருப்பி செலுத்த இயலாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-17 08:50 GMT

கடன் தொல்லையால் வாலிபர் பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லையே விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அருணாச்சலம் நகர், 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் வயது 41. இவர், அண்மைக்காலமாக தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக ஒப்புக்கொண்டபடி திருப்பி செலுத்த இயலாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் ,விரக்தி அடைந்த கோபால், டிசம்பர் 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கோபாலின் மனைவி மலர்விழி, இதுகுறித்து பசுபதிபாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கோபாலின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News