கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு !

பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பெரியனூர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

Update: 2024-04-16 09:22 GMT

வழக்கு பதிவு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது மகன் அஜித் இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

அஜித் தனது தம்பி சூர்யாவுடன் வீட்டின் அருகேயுள்ள தக்காளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது மோட்டார் சுவிட்சை போடுவதற்காக சென்றபோது, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் அஜித் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கு சென்ற சூர்யா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்றார்.அதற்குள் அஜித் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவரது உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கிணற்றில் விழுந்த போது தலையில் அடிபட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News