சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தார்.

Update: 2024-05-03 11:25 GMT

கோப்பு படம் 

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே சொக்கநாதன்புதூா், வணிக வைசியா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மகன் மாரிச்செல்வம் (23). அங்குள்ள கிரஷா் ஆலையில் வேலை செய்து வந்த இவா், கடந்த 22ஆம் தேதி பைக்கில் சிவகிரிக்கு சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அங்குள்ள சோதனைச்சாவடி அருகே அவா் மீது சரக்கு வாகனம் மோதியதாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News