இருசக்கர வாகன விபத்தில் வாலிபர்கள் காயம்

சிவகாசி அருகே இருசக்கர வாகன விபத்தில் வாலிபர்கள் காயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-17 16:02 GMT
சிவகாசி அருகே இருசக்கர வாகன விபத்தில் வாலிபர்கள் காயம்....

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ரகுராமன் மகன் ராஜகுரு(25). அட்டை கம்பெனியில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது நண்பர் சிவகாசி ராஜாகாலனியை சேர்ந்த குருநாதன் மகன் குருமூர்த்தி (26) தனியார் கம்பேனியில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார்.

சம்பவத்தன்று 2 பேரும் வேலை முடித்து எம்.புதுப்பட்டி- சிவகாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது தேவர்சாலை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதினர்.இதில் ராஜகுரு, குருமூர்த்தி 2பேரும் படுகாயம் அடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் ராஜகுரு கொடுத்த புகாரின் பேரில் இரு சக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் கூடலிங்கம் (31) என்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News