பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

வேலூர் அருகே பெண்ணை தாக்கிய இரு வாலிபர்களை பாகாயம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-06-27 09:26 GMT

வாலிபர் கைது

வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (39). இவருடைய 15 வயது மகன் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளான். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிலட்சுமி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களிடம் கேட்டு உள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), கோகுல் (23) ஆகியோர் திடீரென ஆதிலட்சுமியை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆதிலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சூர்யா, கோகுல் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News