மின்வாரியத்தில் பணியாற்றும் கேங் மேன்களுக்கு எலக்ட்ரிக் டிடெக்டர் வழங்க முடிவு: மின்சார வாரியம்

Update: 2024-05-15 12:38 GMT

TNEB

மின்வாரியத்தில் பணியாற்றும் கேங் மேன்களுக்கு எலக்ட்ரிக் டிடெக்டர் வழங்க முடிவு செய்துள்ளனர். மின்கம்பங்களில் ஏறி பழுதை சரிசெய்பவர்களுக்கு பாதுகாப்புக் கருவி வழங்கப்பட உள்ளது. கேங்மேன்கள் அவ்வப்போது மின்சாரம் தாக்கி உயிர் இழப்பது தொடர் கதையாகி வருகிறது. முதற்கட்டமாக சேலத்தில் 450 டிடெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. டிடெக்டர்களை பயன்படுத்தி மின்கம்பத்தில் ஏறும் பொழுது மின்சாரம் இருந்தால் அலாரம் அடிக்கும் என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News