திருவள்ளூரில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!!
By : King 24x7 Desk
Update: 2024-07-10 09:21 GMT
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம் குமார் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில், அப்பள்ளியில் சில நாள்களுக்கு முன் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரடியாக ஆய்வு செய்த நிலையில், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.