நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஒரு தமிழர்... யார் அவர்?
By : King 24x7 Desk
Update: 2024-07-22 10:44 GMT
இந்தியாவின் முதல் மத்திய நிதியமைச்சர் ஒரு தமிழர் என்பது உங்களுக்கு தெரியுமா? கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டியார், சுதந்திரம் பெற்ற பின், நேரு தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தார். நவ.26 1947ஆம் ஆண்டு நாட்டின் முதல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அப்போதைய, பட்ஜெட் மதிப்பு ₹197.39 கோடி ஆகும். கடந்த நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பு ₹45,03,097 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.