அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமதிப்பு: ராமதாஸ்
By : King 24x7 Desk
Update: 2024-09-19 09:30 GMT
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்படி கோயில்களில் சேர்ந்தவர்கள் அவமானப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள் அவமதிக்கப்படுகின்றனர். கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி தருகிறது. அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்கீழ் 24 பேர் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்