பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை... முக்கிய அறிவிப்பு!!

Update: 2025-09-26 12:17 GMT

school

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (செப்டம்பர் 26) காலாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், நாளை (செப்டம்பர் 27) முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்குச் சுமை ஏற்படுத்தும் விதமாக எவ்வித சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையின்போது தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை மூலம் எச்சரித்துள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Similar News