விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை இருக்கும்: ஏடிஜிபி
By : King 24x7 Desk
Update: 2025-09-28 09:07 GMT
ADGP
கரூர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், “கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவெக பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு வழங்கினோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. தேவையான அளவிலான காவலர்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. த.வெ.க கரூர் மாவட்ட செயலாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழப்பு தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் தற்போது ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்” என்றார்.