நாகரீகமற்று கொச்சையாக பேசியதாக அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!!
By : King 24x7 Desk
Update: 2025-09-29 11:52 GMT
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நாகரீகமற்று கொச்சையாக பேசியதாக அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை. கரூர் கூட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளை என்னுள் ஒருவராகவே கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன்; ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். எந்த தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார் என்ற முதல்வரின் வழியில் பயணிக்கிறோம். நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம்; ஆறுதல் தேடுகிறோம், ஆறுதல் சொல்கிறோம் என தெரிவித்தார்.