விஜய்க்கு வெளியே வர பயம்: துரைமுருகன்
By : King 24x7 Desk
Update: 2025-10-08 04:34 GMT
Duraimurugan
தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியே வர விஜய்க்கு பயம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “குற்றம் புரியவில்லை என்றால் தைரியமாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம். தன்நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியே வர விஜய்க்கு பயம். விஜய், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று பார்க்க முடியாமல் வீடியோ காலில் பேசி வருகிறார்" என்றார்.