யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது: உதயநிதி

Update: 2025-10-08 13:15 GMT

udhayanithi stalin

 யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு யாருடன் போராடப் போகிறது என்ற ஆளுநரின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதில் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன்தான் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறது. திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக தொடந்து போராடிக் கொண்டுதான் இருக்கும். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளது ஏன் தெரிவித்தார்.

Similar News