சாலை, தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வழக்கு: இறுதி முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை தடை
By : King 24x7 Desk
Update: 2025-10-17 09:07 GMT
மதுரை
சாலைகள், தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. “முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா?” என நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு கேள்வி எழுப்ப, “டெல்லி, உ.பி. போன்ற மாநிலங்களில் மாற்றம் செய்யும் போது வராத குழப்பம், இங்கே எப்படி வந்துவிடும்” என அரசுத் தரப்பு பதிலளித்துள்ளது.