ஆவின் டெண்டர் முறைகேடு புகார்: வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
By : King 24x7 Desk
Update: 2025-10-23 05:50 GMT
ஆவின் டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஞானசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆவின் பால் விநியோக வாகன டெண்டரில் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் உத்தரவாதத்தை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.