முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு!!
By : King 24x7 Desk
Update: 2024-07-23 08:10 GMT
முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். MSMEகள் தங்கள் மன அழுத்த காலத்தில் வங்கிக் கடனைத் தொடர வசதியாக புதிய வழிமுறை அறிவிக்கப்பட்டது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.