கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2லட்சம் நிதியுதவி: மோடி
By : King 24x7 Desk
Update: 2025-09-28 09:48 GMT
modi
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.