திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 2.55 கோடி பேர் சாமி தரிசனம்: ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கை!!
By : King 24x7 Desk
Update: 2025-01-02 06:49 GMT
Tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (2024) கடந்த ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் வேண்டுதலின்படி கோவில் உண்டியலில் 1,365 கோடி ரூபாயை கோவிலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சுமார் 99 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.