திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 28 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-01-25 06:59 GMT
arrest
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 28 பேரை போலீஸ் கைது செய்தது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 28 பேர் சிக்கினர். உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கி பணிபுரிந்த வங்கதேச நாட்டினர் 28 பேரும் கைது செய்யப்பட்டனர்.