திருவள்ளூரில் காரில் கடத்திய குட்கா பறிமுதல்; 3 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-09-17 06:13 GMT
பைல் படம்
திருவள்ளூரில் பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையின்போது 196 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த ராமச்சந்திரன் (52), இன்பராஜ் (25), திரவியகுமார் (38) கைது செய்யப்பட்டனர். குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.