கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலர் மதியழகன், ஆனந்த், நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு!!
By : King 24x7 Desk
Update: 2025-09-29 11:47 GMT
karur stamepede
கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலர் மதியழகன், ஆனந்த், நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நிர்வாகிகள் ஆனந்த். கரூர் மாவட்டச் செயலர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.