தமிழ்நாடு – கேரளா எல்லையில் 6 மணி நேரமாக போக்குவரத்து துண்டிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-13 06:49 GMT
tamil nadu kerala border flood
கனமழையால் செங்கோட்டை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குளம் உடைந்து 6 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதபுரம் என்ற இடத்தில் குளம் உடைந்து சாலையில் வெள்ளம் செல்கிறது. குளம் உடைந்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தமிழ்நாடு கேரள இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன.