அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவம்பர் 7க்கு ஒத்திவைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-10-17 09:18 GMT
vijayabaskaran
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவம்பர் 7க்கு ஒத்திவைத்தது. சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர், ரம்யா ஆஜராகாத நிலையில், வழக்கை நவம்பர் 7க்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.