இலங்கையில் புதிய பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு
By : King 24x7 Angel
Update: 2024-11-19 07:20 GMT
Sri Lanka
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் என்பிபி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபர் திசநாயக தலைமையில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி வெற்றி பெற்று, அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு கடந்த 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 225 இடங்களில் 159 தொகுதிகளை என்பிபி கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.