உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்: ராகுல்காந்தி
By : King24x7 Rafi
Update: 2024-05-07 05:57 GMT
Ragul
உங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நினைவில் கொள்ளுங்கள், இது சாதாரண தேர்தல் அல்ல, நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.