‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
By : King24x7 Rafi
Update: 2024-07-28 06:06 GMT
stalin
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் அமுதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.