புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி

Update: 2023-11-30 16:48 GMT

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரியலூர் மாவட்ட அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு புதிய தொழில்கள் தொடங்க 20 நிறுவனங்களுக்கு 153.86 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.

இதனையடுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 612 பயனாளிகளுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பட்டாக்களை வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News