274 வழக்குகள் மீது தீர்வு: ரூ.9 கோடி இழப்பீடு வழங்கல்

274 வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

Update: 2023-12-11 12:57 GMT

வழக்குகளுக்கு தீர்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், நேற்று, தேசிய மக்கள் நீதிமன்றம் தீர்வு காணும் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, காஞ்சிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், காஞ்சிபுரம் கூடுதல் நீதிபதி அருண்சபாபதி தலைமை வகித்தார். தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி செம்மல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய மக்கள் நீதிமன்றம் தீர்வு காணும் முகாமினை துவக்கி வைத்தார்.

இதில், 2,156 வழக்குகள் விசாரணை செய்து, 274 வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டன. வழக்குதாரர்களுக்கு, 9 கோடி 96 ஆயிரத்து 306 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளன. இதில், நீதிபதிகள் சிவஞானம், இனியா கருணாகரன் மற்றும் வழக்கறிஞர்கள் ஹரிதாஸ், துரைமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News