தூத்துக்குடி காதல் தம்பதி கொலை - 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கொலை வழக்கில் 2பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

Update: 2023-11-05 03:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம் (24), தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 30-ந்தேதி தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் காலையில் 2 பேரும் முருகேசன்நகரில் உள்ள வீட்டில் இருந்த போது மர்ம கும்பல் அவர்களை வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இந்நிலையில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் உட்பட 4பேரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கருப்பசாமி, பரத் ஆகிய இருவரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News