கள்ளக்குறிச்சி உயிரிழப்பு : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Update: 2024-06-20 04:52 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.. சட்டப் பேரவையின் இன்றைய அலுவலகள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது அமைச்சர்கள் முத்துச்சாமி ஏவா வேலு ‌, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, உள்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்..
Tags:    

Similar News