மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன நாமக்கல் எம்பி மாதேஸ்வரன்

கொல்லிமலை மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு 27 இடங்களில் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி கூறினார்.

Update: 2024-06-25 17:42 GMT

எம்பி மாதேஸ்வரன் நன்றி தெரிவிப்பு 

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற அனைவரும் நேற்று இடைக்கால சபாநாயகர் பருத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நாமக்கல் தொகுதி எம்பியாக பதவியேற்றுக்கொண்ட மாதேஸ்வரன் தனது பதவி பிரமாணத்தில்

ஓங்குக, கோவை செழியன் புகழ், அரூர் முத்துக்கவுணடர் புகழ், அண்ணன் ஈஸ்வரன் புகழ் என்று கூறி பதவியேற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக VS.மாதேஸ்வரன் MP பதவி ஏற்ற பிறகு மத்திய ரயில்வே, தகவல் ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறியதுடன், போடிநாயக்கனூரில் இருந்து சென்னை செல்லும் துரந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கொல்லிமலை மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு 27 இடங்களில் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி கூறினார். இந்த சந்திப்பில் நாமக்கல் முன்னாள் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ் உடன் இருந்தார்.

Tags:    

Similar News