நாமக்கல்லில் இன்று மின்தடை ரத்து

நாமக்கல் நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் (20.06.2024) வியாழக்கிழமை வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-20 01:32 GMT

மின்தடை ரத்து

நாமக்கல் சுற்று வட்டார பகுதியில் இன்று (20-ந் தேதி) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  நாமக்கல் நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (20.06.2024) வியாழக்கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களால், மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை முன்கூட்டியே கூறியிருந்தால் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News