கோட்டைபட்டினம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-18 03:53 GMT

பைல் படம் 

 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க வங்க கடலுக்கு சென்றனர் இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கை அருகே உள்ள நெடுந்திவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து எல்லை தாண்டி வந்ததாக கூறி படகை மற்றும் நான்கு வீரர்களை கைது செய்தனர் இந்த மீனவர்களில் கோட்டைப்பட்டினம் சேர்ந்த பார்த்திபன், சாரதி, முரளி, ராமதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டு மேலும் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News