பழ வியாபாரி கிணற்றில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

உடன்குடி அருகே மாயமான பழ வியாபாரி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-11 08:43 GMT

பழ வியாபாரி சடலமாக மீட்பு 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள ராமசாமிதர்மபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அழகுவேல் (53). பழ வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதிவீட்டில் இருந்து வெளியே சென்ற அழகுவேல் மீண்டும் திரும்பி வரவில்லை.

குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.  இந்த நிலையில் நேற்று மெய்யூர் கலியன்விளை சாலையில் உள்ள தனது தந்தையின் தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அழகுவேல் சகோதரர் ரவி அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுககான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News