பதினைந்து குடும்பத்தார் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2023-10-10 06:50 GMT

ஆட்சியரிடம் மனு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமாரபாளையம் அருகே விடுபட்ட பதினைந்து குடும்பத்தார் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி ஜே.ஜே. நகர் பகுதியில் 120 குடும்பத்தினர் வசித்து வந்தனர். 150 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா வழங்காத நிலையில், 32 ஆண்டுக்கு முன், லட்சுமிநாராயண கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலம் 92 வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு, 77 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

15 நபர்களுக்கு வழங்கப்படவில்லை. பல ஆண்டுகள் ஆகியும் இதே நீடித்து வருவதால், கோட்டைமேடு ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பட்டா கேட்டு 15 குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News