நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

Update: 2023-11-17 10:25 GMT
நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த குருபாதமேடு கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்த நெற்பயிர்கள் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழை நீரில் மூழ்கி நடவு செய்த நெற்பயிர்கள் வீணாய் போய்விட்டது, இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் குருபதைமேடு பகுதியில் முறையான மழை நீர் வடிகால்வாய் அமைத்து தராததால் மழை நீர் வயல்வெளியில் தேங்கி நிற்கிறது.

எனவே போர்க்கள அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாதிப்படைந்த நெற்பயர்களுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News