மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அபராதம் - நகராட்சி எச்சரிக்கை

மாடுகளை ஏலம் விடவும் நடவடிக்கை

Update: 2023-11-23 18:42 GMT

மாநகராட்சி அலுவலகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி ஆணையாளர் ரெங்கநாயகி, நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றும், அதனை மீறி போக்குவரத்திற்கு இடையூறாகவும், அருகில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தும் வகையில் மாடுகளை வெளியே விட்டால் அதனை நகராட்சியினர் பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர் நடவடிக்கையாக விரைவில் மாடுகள் ஏலத்தில் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

Similar News