ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

Update: 2023-11-24 16:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கன மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் செங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அத்திகுளம் கிராமத்தில் வருகால்கள் சரிவர பராமரிக்கப்படாதல் நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டது.

இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர் மேலும் மழைநீர் தேங்கியதால் வீடுகளுக்குள் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News