எம்பி நிதியில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் ஜோதிமணி.

கரூர் எம் பி ஜோதிமணி, எம்பி நிதியில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்

Update: 2023-11-30 16:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எம்பி நிதியில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் ஜோதிமணி. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சியில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூபாய், 49 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூட்டத்தை, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று திறந்து வைத்தார். பி

றகு சமுதாய கூடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சமுதாயக்கூடத்தை அப்பகுதி பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில், தரகம்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த நாட்டாமை பெரியசாமி, கடவூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மலையாண்டி, ராமமூர்த்தி, கரூர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீபன்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News