கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2024-01-22 11:34 GMT
காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடி

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மிடாலக்காடு பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் மகள் பபிஷா (22).  இவர் மாதாபுரம் பகுதியில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தினம்  இரவு பபிஷா வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார்.    

  மறுநாள் காலையில் பார்த்தபோது அவரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும்  கண்டுபிடிக்க முடியவில்லை.      இது குறித்து கருங்கல் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பபிஷா தனது காதலனாக விழுந்த யம்பலம் பகுதி குமரி நகரை சேர்ந்த விஜயகுமார் மகன் சுபின் (24)உடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.        

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வருவதாகவும், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு  தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினர்.    

 இதை அடுத்து இருவரின் பெற்றோரையும்  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலர்களுக்கு அறிவுரை கூறி, சேர்த்து வைத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News