ஆத்தூர் : தாண்டவராயபுரத்தில் குடிநீர் குழாய் திறப்பு

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் எட்டாவது வார்டு பகுதிக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

Update: 2024-02-27 02:47 GMT

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் எட்டாவது வார்டு பகுதிக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் எட்டாவது வார்டு வா.உ.சி நகர் பகுதியில் பொதுமக்களில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒன்றிய குழு நிதியிலிருந்து குடிநீர் குழாய் அமைப்பதற்கு இரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடை நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் திறந்து வைத்தார்

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பழகன் ஒன்றிய துணைச் செயலாளர் சசிகுமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News