செய்யூர் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் வெட்டிக்கொலை

செய்யூர் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் வெட்டிக்கொலை

Update: 2024-03-15 08:54 GMT
செய்யூர் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, ஓதியூர் மாதா குளம் அருகில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செய்யூர் காவல் நிலையத்துக்கு தகவல் தந்தனர்.செய்யூர் போலீசார் ஓதியூர் கிராமத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டை கொண்டு திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்,சரஸ்வதி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்த சோழராஜன் வயது 36 என்பதை கண்டறிந்தனர். மேலும், இறந்து போனவர் அவரது அடையாள அட்டைபடி அவர் தானா..?செய்யூர் ஓதியூர் பகுதிக்கு எப்படி வந்தார்.இவரை வெட்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் இடத்தில் செய்யூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தனர்.
Tags:    

Similar News