காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விவசாயியை ஜாமீனில் விடுவித்த மதுவிலக்கு போலீசார்.

Update: 2024-03-22 13:55 GMT

முற்றுகையிட்ட மக்கள்

கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் விவசாயம் செய்து வருபவர் கார்த்தி.இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து கள் இறக்கியதாக துடியலூர் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் இன்று கோவை மதுவிலக்கு போலீசார் விவசாயி கார்த்தியை கோவை புலியகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டர்.

இது குறித்து தகவல் அறிந்த நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் காவல் நிலையத்தில் ஒன்று கூடியவர்கள் தென்னங்கள்,நீரா பானம் இறக்குவது தங்கள் உரிமை என தெரிவித்து காவல் நிலையத்தில் திரண்டனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இதனையடுத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த மதுவிலக்கு போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்து விவசாயி கார்த்தியை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News