கழன்று ஓடி அரசு பஸ் டயர

குமாரபாளையம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஓடியது.

Update: 2024-07-18 04:55 GMT
சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 07:00 மணியளவில் சங்ககிரி அருகே வந்து கொண்டிருந்தது. பஸ் பழுதின் காரணமாக, மாற்று பஸ் ஏற்பாடு செய்து, ஓட்டுனர் ராஜா, மற்றும் நடத்துனர் மாயகிருஷ்ணன் அதில் பயணிகள் அனைவரையும் அனுப்பி வைத்தனர். இந்த பஸ்ஸை பவானி டெப்போவிற்கு கொண்டு செல்ல,நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புறவழிச்சாலையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பஸ் முன்புற டயர் கழன்று, அருகே இருந்த மூடியிருந்த கடை ஒன்றின் முன் போய் விழுந்தது. ஓட்டுனர் ராஜா, சாமர்த்தியமாக பஸ்ஸை ஓரமாக நிறுத்தினார். பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் போனது.

Similar News