மாநகா் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 24) குடிநீா் விநியோகம் இருக்காது என ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

Update: 2024-07-23 00:52 GMT
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீா்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களில், ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. எனவே, இந்த நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் செல்லும் இடங்களான சுந்தராஜ நகா் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகா் புதியது, மலையப்ப நகா் பழையது, ரயில்நகா் புதியது, ரயில் நகா் பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினா் காலனி பழையது, எம்.கே. .கோட்டை செக்ஸன் ஆபீஸ், எம்.கே. கோட்டை நாகம்மை வீதி, எம்.கே .கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வா்யா நகா், ஜே.கே. நகா், செம்பட்டு, காமராஜ் நகா், எல்ஐசி புதியது, எல்ஐசி சுப்பிரமணிய நகா், தென்றல் நகா் புதியது, தென்றல் நகா் பழையது, தென்றல் நகா், மின்வாரிய காலனி, வி.என். நகா் புதியது, வி.என். நகா் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகா், சுப்பிரமணிய நகா் புதியது, சுப்பிரமணியநகா் பழையது, ஆனந்த நகா், கே.சாத்தனூா், பஞ்சப்பூா், அம்மன் நகா், கவிபாரதிநகா், எடமலைப்பட்டிபுதூா் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகா் பழையது, அன்பு நகா் புதியது, ரெங்காநகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் புதந்கிழமை ஒருநாள் குடிநீா் விநியோகம் இருக்காது.

Similar News