இலவச ஹெல்மெட் வழங்கல்

வழங்கல்

Update: 2024-07-24 04:03 GMT
ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் ஐந்து முனை சந்திப்பு பகுதியில், திருக்கோவிலூர் போக்குவரத்து காவல்துறை உடன் இணைந்து ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன் முன்னிலையில் 10 நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. மற்றும் இரு சக்கர வாகன முகப்பு பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த நிகழ்வில் சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன், செயலாளர் MS கோதம்சந்த், பொருளாளர் T சௌந்தர்ராஜன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி கல்யாண குமார் ராஜேஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News